நடந்து வந்த பாதையை
பெரும்பாலும் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை
நடந்து கொண்டிருப்பவனுக்கு
அது தேவையில்லை
ஆனால் நடக்க முடியாமல் போனாலோ
இல்லை திரும்பி வர நேர்ந்தாலோ மட்டுமே
அது குறித்து சிந்திக்கிறோம்
புதிய ஒருவரை சந்திக்கும் போது
அவருக்கு நம்மை அறிமுகம் செய்ய வேண்டி வருகிறது
இல்லைபழைய சினேகிதங்களை சந்திக்கும் போது
கடந்த காலத்தில் நடந்தவற்றை நினைத்து சிரிக்கவோ அல்லது
அழவோ வேண்டிய நிலை ஏற்படுகிறது
நல்ல நிகழ்வுகள் குறைவாகவே மனதில் பதிவாகிறது
தாக்கங்களும் வேதனைகளும் மட்டும்
மனித மனங்களின் போக்க முடியாத
கறையாகி அல்லது வடுவாகி
காயமாகி விடுகிறது
வயதாகும் போது
உடலிலும் உள்ளத்திலும் மாற்றம் தெரிகிறது
கண்களிலும்
அடி மனதிலும் தொடர்ந்தும் அதே குணாம்சம் தொடர்கிறது.....
என்னை
திரும்பிப் பார்க்க வைத்த என் உறவுகளுக்கு
என் முதற்கண் நன்றி!
என் மனதை திறப்பதாய்
என்னை சிலுவையில் அறைந்து கொள்ளப் போகிறேன்................
No comments:
Post a Comment