Thursday, June 5, 2008

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 11


நான் அந்த பொன்னான
காலத்தை எல்லாம் இழந்தவன் போல
விறைத்துப் போய் நின்ற போது

"என்ன சார்
கல்லாயிட்டே?"
என்ற அப்பாராவின் குரல் என்னை
அவன் பிடித்துக் கொண்டிருந்த
சிறைக் கம்பியை எட்டிப் பார்க்க வைத்தது

திரும்பி அப்பாராவை பார்த்த போது
என்னை அறியாமலே
வேதனை
பெருமூச்சாக வெளியாயிற்று

"என்ன சார் யோசிக்கிறே?" அப்பாராவ் பரிவோடு கேட்டான்.

ஒண்ணுமில்ல
என்றவாறு மீண்டும் எழுந்து சற்று நடந்தேன்.

போலீஸ்காரன் எதையோ அப்பாராவிடம் கன்னடத்தில் சொன்னான்.

"சார்............இங்க வா சார்" என்று அதட்டலாகவே
அப்பாராவ் அழைத்தான்.

நான் அவனை நோக்கி வந்தேன்.

"என்ன ஆச்சுண்ணு மூஞ்சை தொங்கப் போட்டுகிட்டே?
எதுக்கும் பயப்படாதே
நான் உன்னை காப்பாதுரேன் சார்.................
என்னை உனக்கு தெரியாது
இந்த காக்கிகிட்ட கேளு
அப்பாராவ் சொன்ன சொல் தவற மாட்டான்"
அவனது பேச்சில் காரம் : கடுப்பு மட்டுமல்ல
அன்பும் கலந்தே வந்தது.

"சார்
அப்பாராவுக்கு வெளியில பயங்கர செல்வாக்கு சார்.
அப்பாராவுக்கு ஏனோ உன்னை பிடிச்சிருக்கு சார்"
என்றான் அந்த போலீஸ்காரன்.

நான் மாட்டிக் கொள்ளக் கூடிய
பல விடயங்கள் அறையில் இருந்தன.
அவை மாட்டினால் நான் கோவிந்தாதான்.
அதை எண்ணியே பயந்து இறுகிப் போய் இருந்தேன்.

இப்போது
யாரையும் முழுமையாக நம்ப தயாராக இல்லாத மனசு எனக்கு.
இருந்தாலும் அப்பாராவின் நடத்தை
முற்றிலும் வேறாக இருந்தது.

"இந்த வலியில கூட
என்னை பத்தி யோசிக்கிறியே?" என்றேன்.

"இல்ல இன்ஜினியர் சார்
உன்னை பார்த்தாலே பாவமா இருக்கு சார்" என்றான்

இந்த இன்ஜினியர் சார் எல்லாம் வேணாம்
ஜீவன் என்று கூப்புடு என்றேன்.

"எனக்கு அதுதான் புடிக்கும்
எனக்கு ஒரு இன்ஜினியர்
சிங்கப்பூர் இன்ஜினியர் பிரெண்டுண்ணு சொல்லிக்கணும்.........."
என்று குழந்தை போல சிரித்தான்.

ரவுடித் தனத்திலும்
அவன் பச்சை புள்ளை மனசு வெளிப்பட்டது.
அது அவனது திருப்தி

"தூக்கம் வருதா
வெளிய பென்ஜு வலிக்கும்
உள்ள வந்து
என் பெட்டுல தூங்கு இன்ஜினியர் சார்.
நான் கீழ படுத்துக்குவேன்"

அவன் பாசமாக
ஒரு அண்ணன் போல்
வார்த்தைகளால் இப்போது அரவணைத்தான்.

உள்ள வர முடியுமா?

"தொறந்து விடு
சார் தூங்கட்டும்.........." என்றதும்
மறு பேச்சே இல்லாமல்
வெளியே இருந்த போலீஸ்காரன்
ரிமான்ட் கதவை திறந்து விட்டான்.

நான் உள்ளே போனதும் கதவை தாழிட்டான்.

அவனுக்கு ஒரு பெட் கொடுக்கப்பட்டிருந்தது.
அதில் போய் உட்காந்தேன்.

"இன்ஜினியர் சார்
தப்பா நினைச்சுக்காத
உனக்கு பொண்ணா கிடைக்காது
அந்த பொண்ணு உனக்கு இனியும் வேணுமா?"

இவ்வளவு பண்ணினதுக்கு பிறகுமா?
ஊகும்.................நான் தலையாட்டினேன்.

"அப்போ
அவங்க இருக்க அட்ரஸ் குடு
நாளைக்கு யாரும் போலீஸுக்கு வர மாட்டாங்க"

எப்படி அப்பாராவ்?

"நீ உள்ள இருக்கே சார்.
அவங்கள குடும்பத்தோட
இன்னைக்கு ராத்திரியே
போட்டு தள்ளிட சொல்றேன்"

யோவ்..........பைத்தியகாரன் மாதிரி பேசாத
என்று எழுந்திருக்க முயன்ற என்
கையை பிடித்து உட்கார வைத்தான் அப்பாராவ்.

"இன்னமும் லவ்வாதான் இருக்கே?"
சிரித்தான்
"நாளைக்கு முடிவு அவ கையில இருக்கு
அதை மறந்திடாத.........................."

அப்பாராவ்
எனக்கு அவளை தெரியும்.
அப்படி செய்ய மாட்டா?
ஒரு வேளை யாராவது
அவளை பிரேன் வாஸ் செய்திருப்பாங்க.
நாளை காலையில இசக்கு பிசகா நடந்தா
நீ நினைக்கிறதை நான்தான் செய்வேன்

"உன்னைதான்
உள்ள போட்டுடுவாங்களே?" மீண்டும் சிரித்தான்

அதனாலென்ன
நான் திரும்பி வராமலா இருப்பேன்.
அது 6 மாசமாகட்டும்
இல்ல
6 வருசமாகட்டும்
சாவு என் கையாலதான்
யாரும் செஞ்சா அதனால எனக்கு
தூக்கம் வராது
அது என்னால நடக்கணும்
அப்போதான் எனக்கு தூக்கம் வரும்

அப்பாராவ் என்னை ஒரு மாதிரயாக வெறித்து பார்த்தான்.

"இந்தா பாருடா
அப்பாவிண்ணு நினைச்சேன்
சார் சாமி ஆடுறதை"
என்று சிரித்தான்.

நான் அதற்கு பின்னர் எதுவும் பேசவில்லை
நிலத்தை வெறித்து பார்த்தேன்.

"நாளைக்கு இல்ல
அதுக்கப்புறமானாலும் பரவாயில்ல
இன்ஜினியர் சார்
பெயில் எடுக்கணுமுண்ணாலும்
எது வேணுமுண்ணாலும் நான்தான் செய்வேன்."

ஓகே

"இன்னையில இருந்து
உன் பிரச்சனை என் கையில
இனி நான்தான் எல்லாமே.
உன் விபரம் பூரா எனக்கு தெரிய வரும்"

அவனை வியப்போடு பார்த்தேன்

"எல்லா இடத்திலயும் ஆள் இருக்கு.............
இப்போ தூங்கு.................."
அவன் கடுமையாக தெரிந்தான்.

நான் அவனோடு தொடர்ந்து பேச விரும்பவில்லை.
கீழே போடப்பட்ட மெத்தையில் சாய்ந்தேன்.

அவன்
என்னைப் பற்றி
அந்த போலீஸ்காரனிடம் நிறையப் பேசிக் கொண்டிருந்தான்.
இடையிடையே இன்ஜினியர் சார்
என்பதை விட மற்றவை எதுவுமே புரியவில்லை.

காலையில நடக்கப் போறதுக்கு
முகம் கொடுக்க தயாரானேன்.................

No comments: