Thursday, June 5, 2008

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 15


ரேகா வந்து விடுதி அறைக் கதவை தட்டிய பின்தான்
எமது தூக்கமே கலைந்தது.

நல்லா தூங்கீட்டீங்க போல

பார்த்து பார்த்து களைச்சு............என்றதுமே
ரேகா சிரிக்கத் தொடங்கினாள்.

போகலாம் வீட்டில சாப்பாடு ரெடி என்றாள்.

நாங்கள் மீண்டும் ஒரு ஆட்டோவில்
அவள் வீடு இருந்த
விவேக் நகரை நோக்கி பயணித்தோம்

விவேக் நகருக்கும்
நீலசந்ரா எனும் பகுதிக்கும்
இடைப்பட்ட பகுதியில் இருந்த
அவள் வாழும் பகுதிக்கு வரும் போதே
பல் வேறு இன மக்கள் வாழும் பகுதி அது
என்பதை என்னால் உணர முடிந்தது.

நாங்கள் மூவரும்
ஆட்டோவில்
தமிழில் பேசிக் கொண்டு வந்த போது
ஆட்டோ ஓட்டுனர்
"சென்னையில் இருந்து வர்றீங்களா?"
என்றதும் எனக்கு அதிர்ச்சயான மகிழ்சியாக இருந்தது .

"ஆமா
நீங்க தமிழா?"

ஆமா சார்
நான் சின்ன வயசிலேயே
எங்க அப்பா அம்மா கூட
இங்க வந்துட்டேன்.
நான் கூட புரசவாக்கம்தான் சார் என்று
ஆட்டோ ஓட்டுனர் சொன்னார்.

"உங்க பேரு?"

"குமார்"

"புதுசா யாராவது கிடைச்சா
எங்களை மறந்துடுவார்."
என்று ரேகா ஆட்டோ ஓட்டுனரிடம் சொன்னதும்

"இல்ல குமார்
இவங்களுக்கு இவங்க ஊரு நல்லாதான் இருக்கும்.
நீங்க நம்ம ஊருல இருந்து வந்து இங்க இருக்கீங்க.
நமக்கு வித்தியாசமா இருக்கும் இல்லயா?" என்றேன்.

"ரொம்ப அழகான ஊரு சார்.
போறதுக்கு முன்னாடி கொஞ்சம்
சுத்தி பாத்துட்டு போங்க சார்.
சாயங்காலம் ஆனா
கொஞ்சம் குளிரும்.
அவ்வளவுதான்"

"தனியா போறதுக்கு முடியாதுண்ணு நினைக்கிறேன்.
கன்னடம் தெரியாதில்ல"

"ஐயோ
ரொம்ப பேர் தமிழ் பேசுவாங்க சார்.
இங்கிலீஸ் தெரிஞ்சா போதும்
பிரச்சனையே இருக்காது சார் "

"தமிழங்களுக்கு எதிரா
பிரச்சனை எல்லாம் நடந்திருக்கேப்பா?"

"சினிமாக்காரங்களும்
அரசியல்வாதிகளும் செய்யுற கூத்து சார் அது
அந்த நாலு பேரால
எத்தனை பேர் பாதிக்கப்படுறாங்க தெரியுமா?"

அப்பிடியா?

"இப்போ
நீங்க போற இடத்தில கூட
எல்லாரும் கலந்து இருக்காங்க சார்.
கிரிக்கட்டு நடக்கிறப்போ
முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவா இருப்பாங்க
மத்தவங்க இந்தியாவுக்கு ஆதரவா இருப்பாங்க.
அதுவே சில நாளைக்கு பிரச்சனையா இருக்கும்
அப்புறம் மறைஞ்சுடும்.

நடிகர் ராஜ்குமார் மாதிரி ஆளுக
தமிழ் படத்துக்கு எதிரா தேவையில்லாத பிரச்சனை
எழுப்புவாங்க.
நம்ம கூட்டம்
கன்னட படத்து கட் அவுட்டை தூக்கி்ட்டு
அதை விட பெரிய கட்அவுட் வைப்பாங்க.
இல்ல
ஒண்ணை மறைக்கிற மாதிரி
ஒண்ணை வைப்பாங்க.
இன்னும் சில தமிழங்க
வள்ளுவர் சிலை வைக்கணுமுண்ணு
அரசியல் நடத்துவாங்க
போராட்டம் நடத்துவாங்க
இதுல வேற
சென்னையில இருந்து வந்து
இங்க எதையாவது பேசிட்டு போயிடுவாங்க.
அவங்க வாயில வந்ததை பேசிட்டு போயிடுவாங்க சார்
அடி உதை வாங்கிறது இங்க உள்ள அப்பாவி நாங்க.
அதை தவிர வேற பிரச்சனையிண்ணு ஒண்ணும் கிடையாது சார்."
என்றார்.

வரும் போது யோசிச்சேன்.
இப்போ தெம்பாயிட்டேன் என்றதும்
அனைவரும் சிரித்தார்கள்.

"ரொம்ப ஜாலியா இருக்கீங்க சார்"

"இல்ல குமார்
தெரியாத ஒரு இடத்துக்கு போனா
தெரியாதவங்க மூலம் ரொம்ப தெரிஞ்சுக்கலாம்.
வாழ்றது சந்தோசத்துக்காக
கிடைக்கிற நேரம் சிரிச்சிடுணும்
மூஞ்சை தொங்கப் பொட்டுக்கிட்டு இருந்தா
வாழ்கை நரகமாயிடும்" என்றேன்.

"இவர் பேசினா நிறுத்தவே மாட்டார்.
சந்தோசமா இருந்தா இருக்க இடம் கலகலக்கும்
கோபம் வந்தா அந்த இடமே அதிரும்"
என்றாள் ரேகா என்னைப் பற்றி..............

நான் ரேகாவை பார்த்தேன்.

"கோபம் இருக்கிற இடத்திலதான்
குணமும் இருக்குமும்மா" என்றார் குமார்.

ஆட்டோ விவேக் நகரை அண்மித்ததும்
சாப்பிட்ட பிறகு
இந்த ஆட்டோவிலயே திரும்பி போயிடலாமா என்று
ரேகாவிடம் கேட்டேன்.

"இல்ல சார்
நீங்க வேற ஆட்டோவில போயிடுங்க
வெயிட்டிங்கில எனக்கு கொடுக்கிற சார்ஜ்ஜை விட
கம்மிதான் நீங்க போறதுக்கே வரும்.
மெட்ராஸ் மாதிரியெல்லாம்
மீட்டருக்கு மேல எல்லாம்
யாரும் கேக்க மாட்டாங்க சார்"
என்றார் குமார்.

இப்படியான சம்பாசனைகள்தான்
நாம் போகும் ஊர் குறித்த கருத்துகளை
நம் மனதுள் பதிய வைக்கும்.
அதுவும் நம்ம இனத்துல ஒருத்தர் கிடைச்சா
அதுவே ஒரு உறவு கிடைச்சது மாதிரியாகிடும்.
மனசே லேசாக்கிடும்.

குமார் கூட பேசியதில்
மகிழ்வாக இருந்தது.
ரேகா பெங்களூர் குறித்து
என்னதான் சொல்லியிருந்தாலும்
குமாரின் திறந்த பேச்சு என்
கண்களை திறந்திருந்தது.
தேவையற்ற பயத்தை போக்கியது.

நாங்கள் ரேகாவின் வீட்டுக்கு போன போது
அனைவரும் அன்பாக வரவேற்றார்கள்.

தேனீர் பரிமாறினார்கள்.

என்னைப் பற்றி
ரேகா வீட்டில்
ரேகா சொல்லி இருந்ததால்
வீட்டில் அனைவருக்கும் என்னை தெரிந்திருந்தது.

வீட்டில் அனைவரும்
நன்றாகவே தமிழில் பேசினார்கள்.

ரேகாவின் அப்பா
இந்திய இராணுவத்தில் இருந்த போது எடுத்த படங்கள்
வீட்டு சுவரை அலங்கரித்துக் கொண்டு இருந்தன.

அதற்கு அடுத்து அதிகமாக இருந்தது
ரேகாவின் படங்கள்தான்.

எங்கு போனாலும்
வீட்டு எழிலை அழகை ரசிப்பேன்.


போகும் வீட்டில் உள்ளவர்கள் குறித்து
அறிந்து கொள்ள
விளக்கம் எதுவும் சொல்லாமல்
அவர்கள் குறித்து விளக்கம் தருவது
நாம் போகும் வீடுகளில் மாட்டப்பட்டிருக்கும்
புகைப்படங்களும்
தெரியும் புத்தகங்களும்தான்.

அவர்களது குடும்ப படத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன்.

ரேகாவின் அம்மா
என்னருகே வந்து

"இது பாகிஸ்த்தான் யுத்த காலத்தில எடுத்த படம்.
இது கடைசி படமா இருக்கும் என்று
நினைச்சிதான் எல்லாரும் சேர்ந்து ஒரு படம்
எடுத்துக்கிட்டோம்.

பக்கத்தில அன்னை இந்திராவோடு இருந்த
படத்தை காட்டி
இந்திரா அம்மா வந்து எங்களை பாதுகாப்பு காரணமாக
வேறு இடத்துக்கு போக சொன்னாங்க.
செத்தாலும் அவர் இருக்கிற இடத்தை விட்டு
போக மாட்டோம் என்று சொன்னேன்.
யுத்தம் முடியும் வரை
அங்கேதான் இருந்தோம் என்றதும்
வியப்போடு ரேகாவின் அம்மாவை
திரும்பி பார்த்தேன்.

அவர் சர்வ சாதாரணமாக
இதில இருக்கிறது அசோக்
வீராட்டில இருக்கிறான்.
இது சின்னவன் அருண் என்றதும்
பக்கத்தில் நின்ற அருண்
அம்மாவை அணைத்துக் கொண்டான்.

இது ஆஷா
இப்போ வந்துடுவா?
ஜீவன் வாறதா முதல்ல ரேகா சொல்லல்ல
தெரிஞ்சிருந்தா லீவு போட்டிருக்கலாம்
என்று கோபமா போனாள்.
அரை நாள் லீவு போட்டு இப்போ வந்திடுவா?

நான் ஏதுவுமே பேசவில்லை.
என்னைப் பற்றியும் எதுவும்
ரேகாவின் அம்மா கேட்கவில்லை.
மீண்டும் போய் நான் அமர்ந்த போது

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று
சற்று சுகயீனமாகி
அமர்ந்து கொண்டிருந்த அப்பாவை
அரவணைத்துக் கொண்டே
கொங்கினி மொழியில்
ஏதோ பேசிக் கொண்டிருந்த ரேகா
பசியாயிருக்கும் சாப்பிடலாமா? என்றாள்.

ஆஷா வந்திடட்டும் ரேகா
எல்லாரும் ஒண்ணா சாப்பிடுவோம்.
வேணும்ணா
அப்பாவுக்கு நேரத்துக்கு சாப்பிடக் கொடேன் என்றேன்.

அப்பாவிடம் சாப்பிடுறீங்களா என்று ரேகா கேட்க
இல்ல ஆஷா வரட்டுமே என்றார்.

அந்த இடைவெளியில்
பாகிஸ்தான் - இந்தியா வோர் பத்தி
அவரோடு தெரிந்து கொள்ள விரும்பி
நான் பேசிய போது
ரேகாவின் அப்பா ரேகாவை பார்த்தார்.

அவள் ஏதோ கொங்கினி மொழியில்
சொன்ன பிறகே
தமிழிலும் ஆங்கிலத்திலும் சற்று
மனம் திறந்தார்.

பேச்சின் இடையே
தமது இராணுவ வாழ்வு குறித்தும் பேசினார்.

கர்னாடக மாநிலத்து
[url=http://images.google.ch/imgres?imgurl=http://www.boloji.com/places/024a.jpg&imgrefurl=http://www.boloji.com/places/024.htm&h=252&w=220&sz=35&hl=de&start=6&sig2=dYmXsk2BlhOiIZERUMpP_g&um=1&tbnid=6WsCLZnBQFox3M:&tbnh=111&tbnw=97&ei=SrT7RoTuD4WQwAH8tr3XDw&prev=/images%3Fq%3Dkodagu%26svnum%3D10%26um%3D1%26hl%3Dde][size=125]கொடகு(குடகு)[/size][/url]தான் இவர்களது சொந்த ஊர்.
அவர்கள் பேசும் மொழி கொங்கினி.
[img]http://www.madikeri.com/image/kariappa.gif[/img]
இந்தியாவின் முதலாவது இராணுவ ஜெனரல் காரியப்பா அவர்கள்
ரேகாவின் குடும்பத்து உறவு.
பாட்டன் முறை
கூர்க் இனத்தைச் சேர்ந்த
இவர்களது குடும்பமே இராணுவ குடும்பம்தான்.
பல மொழிகள் பேசக் கூடியவர்கள்.
மூத்த மகன் அசோக் கூட
இந்தியாவின் கடற்படைக் கப்பலான
விராட்டில் இருந்தான்.

இவை குறித்து
ரேகாவின் அப்பாவால்தான் அறிய முடிந்தது.
ரேகா ஒரு வார்த்தை கூட சொன்னதே இல்லை.
ஆச்சரியம்தான்?

பேசிக் கொண்டிருக்கும் போதே
ஆஷா வேகமாக வீட்டினுள்ளே வந்தாள்.
வந்ததும் வராததுமாக
ரேகாவை கடிந்து கொண்டாள்.

ஒரே கலகலப்பு.

அமைதியாக
கல்லு பிள்ளையாராக இருந்த
ராஜாவை ஒரு முறை பார்த்தேன்.

அவன்
தலை கால் புரியாமல்
இறுகிப் போயிருந்தான்.

பாருங்க ஜீவன்
நீங்க வரப் போறதா
சொல்லவே இல்ல.
இவ காலயிலதான் வந்து சொன்னா.
ஒரு போண் போட்டிருந்தா லீவு போட்டிருப்பேன்
என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.

நான் ராஜாவை
இது என் தூரத்து முறை சகோதரன்.
பெல்ஜியத்திலிருந்து வந்திருக்கிறான்.
பெங்களூரை சுற்றிக் காட்ட அழைத்து வந்தேன்
என்று ஒரு பொய்யை சொன்ன போது
ரேகா மெதுவாக என்னைப் பார்த்து சிரித்தாள்.

நான் ஏதாவது பொய் பேசினா
அது என் மூஞ்சிலேயே தெரியும். :cheese:

பொய் சொல்ற மூஞ்சை பாரு
என்று ரேகா என் காதை கடித்ததும்

என்னைப் பத்தி ஏதோ சொல்றே போல
என்று பதறிய ஆஷா
அவள் உடுத்தியிருந்த சாறி குறித்து
பேசுறோம் என்று நினைத்துக் கொண்டு
ஆஷா
உடுத்தியிருந்த சாறியை காட்டி
இது நீங்க ரேகாவுக்கு சிங்கப்பூரில வாங்கிக் கொடுத்த சாறி
எனக்கு ரொம்ப பிடிச்சுது
அதுதான் நான் திருப்பி கொடுக்கவே இல்ல என்றதும்
தப்பித்தேன் என்று எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

நிலமையை சமாளிக்க
"நாங்க சாப்பிட்டாச்சு
நீ சாப்பிடு ஆஷா" என்று ரேகா
ஆஷாவை பார்த்து சொல்ல

"ஐயோ ஒண்ணா சாப்பிடலாமெண்ணுதானே
ஓடி வந்தேன்.
கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா?" என்று நோகும் போதே

"இல்ல ஆஷா
யாரும் சாப்பிடல்ல."
நீ வரும் வரைக்கும் காத்திருந்தோம் என்று நான் சொன்னதும்

அதானே?
என்று சாப்பாட்டு அறையை எட்டிப் பார்த்தாள்.

அம்மா வந்து
"போதும் ரகளை
வாங்க சாப்பிடலாம்"
என்றதும்
எல்லோரும் எழுந்து
சாப்பாட்டு மேசையை நோக்கிச் சென்றோம்...


Kodagu (anglicized as Coorg), a fertile mountainous region of Karnataka blessed with natural beauty, is the birthplace of Kaveri River. Nestled in the Sahyadri Mountains of the Western Ghats, this rugged and hilly region is inhabited by a unique group of people with martial traditions. They are a relatively a small community called Kodavas (Coorgs or Coorgis). The Kodavas have fiercely guarded their tradition and customs as well as their uniqueness. Kodavas are the dominant class living in Kodagu though they only form about 15 to 20 percent of the population. There are 100,000 Kodavas in Kodagu with a total population of 545,000

No comments: