Thursday, June 5, 2008

நினைத்தாலும் மறக்க முடியாதவை . 16


"ஐயோ ஒண்ணா சாப்பிடலாமெண்ணுதானே
ஓடி வந்தேன்.
கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா?" என்று நோகும் போதே

"இல்ல ஆஷா
யாரும் சாப்பிடல்ல."
நீ வரும் வரைக்கும் காத்திருந்தோம் என்று நான் சொன்னதும்

அதானே?
என்று சாப்பாட்டு அறையை எட்டிப் பார்த்தாள்.

அம்மா வந்து
"போதும் ரகளை
வாங்க சாப்பிடலாம்"
என்றதும்
எல்லோரும் எழுந்து
சாப்பாட்டு மேசையை நோக்கிச் சென்றோம்.

நாங்கள் சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்ததும்

மேசையில் இருந்த மதுபானத்தை
ரேகாவின் அப்பா திறந்தார்.

நான் ரேகாவை பார்த்தேன்.

என்னருகே வந்த ரேகா
"இது கொடகு மக்களின் முறை
விருந்துக்கு யாராவது வீட்டுக்கு வந்தா
இப்படி மது அருந்துவாங்க.
ஆனா எப்பவும் இருக்காது"

"ஓ அப்படியா" என்றேன் வியப்போடு.
இந்தியாவில் இப்படி ஒரு வழக்கம் இருப்பதை
அறிந்து கொண்ட முதன் முறை அது.

"அதுக்காக நீங்க சாப்பிட ஒண்ணும் வேணாம்" என்றாள் ரேகா.

நான் சிரித்தேன்.

"ஜீவன் சாப்பிடுறதில்ல" என்று
ரேகா சொன்ன போது
அவர்கள் வீட்டில் அனைவரும் என்னை பார்த்தார்கள்.

"சிங்கப்பூரில எல்லாம் இருந்திருக்கீங்க?"
என்று என்னை அவள் அப்பா பார்த்தார்.

"சிகரட் கூட ஜீவன் பத்துறதில்ல" என்று
ரேகா சொன்ன போது ஆசா சிரித்தாள்.

"ஆசா தம் அடிப்பியோ?
எனக்காக பார்க்காதீங்க
நீங்க தாராளமா சாப்பிடுங்க" என்று சொல்லி விட்டு
"ராஜா நீ வேணுமுண்ணா கூட சாப்பிடு" என்றேன்.

"இல்ல வேணாம்" என்றான்.

"பரவாயில்ல" என்றேன்
என்னையும் ரேகாவையும் தவிர
அனைவரும் சாப்பிட்டார்கள்.

ரேகா சாப்பிட மாட்டாள் என்பது
எனக்குத் தெரியும்.

சென்னையில் இருக்கும் போது
என் நண்பர்களுடன் போனால்
அவர்கள் மது அருந்துவார்கள்.
அவர்களோடு இருந்து விட்டு
ரேகாவை சந்திக்க போகும் போது
புகைபிடித்த வாசனை கூட என் உடைகளில்
இருக்கும்.

அது குறித்து நானும் எதுவும் சொல்லவில்லை.
அவளும் கேட்கவில்லை.

ஆரம்பத்தில்
நானும் மது அருந்துவேன் என்றே
நினைத்திருந்திருக்கிறாள்.

சினிமா ஸ்டண்ட் நண்பர்கள்
ஒரு முறை
என் வீட்டுக்கு வந்து மது அருந்தினார்கள்.

நான் குடிக்காமல்
அவர்கள் பக்கத்தில் அமர்ந்து
அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.

அன்று ரேகா என்னை பார்க்க வந்திருந்தாள்.

அவளுக்காக நான் மது அருந்தாமல்
இருப்பதாக நினைத்தாள் போலும்
தனியே என்னை அழைத்து
"எனக்காக நீங்க இதெல்லாம் செய்ய தேவையில்ல
உங்களுக்கு விருபமிண்ணா குடிக்கலாம்" என்றாள்.

எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லலை.

"அட பாவமே இங்க பாருங்க
இவ என்னை தப்பு பண்ண சொல்றா..........."என்று
ரேகாவை இழுத்து வந்த போது மலைத்தவர்கள்
திரும்ப சொல்லு என்று
அவள் சொன்ன போது
என் நண்பர்கள்
சிரித்த சிரிப்பை ஒரு போதும் மறக்க முடியாது.

என் நெருங்கிய நண்பன் ஸ்டன்ட் பாபு.
சென்னை எம்ஜீஆர் நகரில் இருந்தான்.
அவன் அப்பாவும் ஸ்டண்டன்ட் மாஸ்டர்தான்.
ஆனால் பாபு
அதிகமாக இணைந்து பணியாற்றியது
கிருபா மாஸ்டர் கூடத்தான்.

பாபு சிரித்தபடியே சொன்னான்.
"ரேகாம்மா
ஜீவன் தப்பான எல்லார் கூடவும் போவாரு : இருப்பாரு
ஆனா இவர் தப்பு பண்ண மாட்டாரு"

இது அவளுக்கு வியப்பாக இருந்தது.

நானும் சினமாக்காரரோடு இருக்கிறேன் என்பதால்
என் மேல் கொஞ்சம் சந்தேகமாகவேதான்
இருந்திருக்கிறாள் என்பதை அவளே சொன்ன போது
என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

"அப்போ குடித்ததே இல்லையா?" என்றாள்.

"இல்ல ரேகா
எங்க வீட்டில யாரும் குடிக்கிறதில்ல.
அதில்லாம கராட்டே செய்ததால
அப்படியான பழக்கம் வரல்ல
இருந்தாலும் ஜப்பானில் இருந்தப்போ
அவங்களோடு குடிச்சிருக்கேன்.
அது ஜஸ்ட் கம்பனி.
ஆனால் எனக்கு பிடிக்காது."
என்ற போதுதான்
நான் மது அருந்தாதற்கான காரணத்தை
அவள் புரிந்து கொண்டாள்.

என் நண்பர்கள்
என் மேல்
அளவு கடந்த பாசமாக இருந்தார்கள்.
வெளியே அவர்கள்
என்னதான் தப்பு பண்ணினாலும்
மோசமானவர்களாக இருந்தாலும்
என்னோடும் சரி
ரேகாவோடும் சரி
மிக அன்பாகவே இருந்தார்கள்.

அண்மையில் கூட பேசும் போது கேட்டாள்
"சென்னைக்கு போனப்போ பாபுவை எல்லாம் பாத்தீங்களா"ண்ணு

"ஏன்" என்று கேட்டேன்.

அவங்கள சினிமாவில பாத்து
ரொம்ப மோசமா நினைச்சிருந்தேன்.
ஆனா அவங்கதான் ரொம்ப நல்லவங்க என்றாள்.

இந்த பிளாஸ்பேக் முடியறதுக்குள்ள
எல்லாரும் கொஞ்சம் ஊத்தி
நிறைய கொட்டியிந்தாங்க.

சாப்பிட்டு விட்டு
அனைவரும் முன் சாலையில்
உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

இருந்தாலும் வந்த விசயத்தை எப்படி ஆரம்பிக்கிறது
என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன்.

ரேகா மெதுவாக காதை கடித்தாள்.

"ராஜாவுக்கு பிடிச்சிருக்காண்ணு முதல்ல கேளுங்க
அப்புறமா ஆசாவை கூப்பிட்டு கேக்கலாம்.
ஆசா இயெஸ் சொன்னா அம்மாவோடு பேசலாம்
இல்லேண்ணா......................" என்று ரேகா சொல்லி முடிக்கிறதுக்குள்ள

"பெங்களூரை சுத்தி பாத்துட்டு
சென்னைக்கு போகலாம்" என்றேன்.

சீரியஸாவா பேசுறீங்க ரேகா சிரித்தாள்.

"என்ன மாப்புள்ளை
பொண்ணை புடிச்சிருக்கா?"
நான் ராஜாவிடம் சிங்களத்தில் கேட்டேன்.

ஏன்னா யாருக்கும் சிங்களம் புரியாது என்பதால்.

புடிச்சிருக்கு என்றான்.

"உனக்கு! ஓகே!
அவளுக்கு எப்படியோ?
நான் ரேகாவிடம் ஓகேயாம் என்றேன்.

சற்று நேரத்தில் டீ வந்தது
அதற்கு பிறகு ரேகாவையும் ஆசாவையும்
ரொம்ப நேரமா காணோம்.

எனக்கு புரிஞ்சுது
ஏதோ இழுபடுதுண்ணு................

நான் ராஜாவை பார்த்தேன்.

அவன் சற்று தடுமாற்றத்துடனே இருந்தான்.

"யோசிக்காதே
இங்க கூட
என்னை ரேகாவுக்கு மட்டும்தான் தெரியும்.
என்னை தவிர யாருக்கும் உன்னை தெரியாது.
ஒரு ஊரில இருந்து இன்னொரு ஊருக்கு
பொண்ணு குடுக்கவே இந்தியாவில யோசிப்பாங்க.
நீ வேற பெல்ஜியத்தில இருக்கே....................
இது டிரைதான்.
திருப்பியும் சொல்றேன்
காரண்டி கிடையாது"

வேதனையோடு தலையை ஆட்டினான்.

கவலைப்படாத
உதை ஒண்ணும் விழாது.
ஏன்னா இவ்வளவு நேரமா உட்கார்ந்து
இருக்கிறதை வச்சு சொல்றேன் என்றேன்.

சற்று வெருண்டு என்னை பார்த்தான்.

"எனக்கு ஓரளவாவது இந்தியா தெரியும்.
ரேகாவுக்கும் என்னை தெரியும்
இதை விட
எங்க அக்கா வீட்டுக்கு ரேகா போயிருக்கா.
அவங்கள எல்லாம் தெரியும்.
ராஜா
இந்தியாவுக்கு இதுதான் உன் முதல் விசிட்.
ரெடியா இரு" என்றேன்

"துரத்தினா ஓடக் கூட தெரியாது மாஸ்டர்" என்றான்.

"எனக்கு மட்டும் என்ன
துரத்தனா ஓடத் தெரியுமுண்ணா நெனைக்கிறே
நானும் பெங்களூருக்கு முதல் விசிட் இதுதான்.
இருந்தாலும்
ஓட எல்லாம் கஸ்டப்படுத்த மாட்டாங்க.
மில்டரியில இருந்தவங்கயில்லையா?
வெடிதான்." என்றேன்.

இல்ல.......... என்றான்.

பெல்ஜியத்தில இருந்து வந்தப்போ
பசையோட சொன்ன கதை எல்லாத்தையும்
திருப்பி கேக்க ஆசையாயிருந்துச்சு.

"பெங்களூர் மாதிரி குளிரா இருக்குமா பெல்ஜியம்?" என்றேன்.

"சும்மா போங்க மாஸ்டர்" என்றவன்
இராணுவ உடையில் இருக்கும் ரேகாவின்
அப்பா போட்டோவை கண் கொட்டாமல் பார்க்கத் தொடங்கினான்.

இதெல்லாம் தெரிஞ்சிருந்தா
இவன் வந்தே இருக்க மாட்டான்
என்று அவன் நிலமையை பார்க்கவே தெரிந்தது.

மாடியிலிருந்து இறங்கி வந்த ரேகா
"என்ன பேசிட்டிருக்கீங்க?" என்றாள்.

"எல்லாம் பெல்ஜியம் குளிரை பத்திதான்" என்றேன்.

"என்ன ஜீவன்.........மேல கொஞ்சம் வந்துட்டு போங்க" என்றாள்.

அவள் பின்னால் மேலே போனால்
ஆசா மொட்டை மாடியில் சற்று கலக்கத்தோடு நிற்பது தெரிந்தது.

"ஆசா என்ன சொல்றா?"

"அவர் யாரெண்ணே தெரியாது
அப்புடீண்ணு யோசிக்கிறா?"

"ஓகே
நீ கீழ போ
நான் பேசிட்டு வர்ரேன்." என்றதும் ரேகா கீழே போனாள்.

நான் பேசத் தொடங்கினேன்.

"இங்க பாரு ஆசா.
இது உனக்கு ஒரு சாக் மாதிரி இருக்கும்.
அது எனக்கும் தெரியும்.
அவன் இங்க வந்ததிலயிருந்து
இந்தியாவில ஒரு பொண்ணை பாத்து
கல்யாணம் பண்ணி கொடுங்கண்ணு உயிரை வாங்குறான்.
அவனுக்கு நான் சொல்லிட்டேன்.
இதெல்லாம் அவ்வளவு ஈசி இல்லேண்ணு?
அதை அவன் இப்போ புரிஞ்சிருப்பான்.
கீழ பயத்தில இருக்கான்"

"ஏன்?"

"உங்கப்பா மில்டரியில இருந்த படத்தை காட்டி
ஓட எல்லாம் முடியாது
விசயம் தெரிஞ்சா வெடிதான் அப்படிண்ணு சொல்லி
வெருட்டிக்கிட்டே இருந்தேன்.
அதுக்குள்ள ரேகா வந்துட்டா.........." என்றேன்.

ஐயோ பாவம் என்று ஆசா சிரித்தாள்.

"நீ சிரிக்கிறதையே
இப்போதானே பார்க்கிறேன்" என்றேன்.

"ஏன் நான் சிரிக்கிறதை பார்க்கவே இல்லையா?"

"எங்க
நீ வந்ததும் வராததுமா எல்லோரும் சாப்பிட்டாச்சுண்ணு கத்தினே?
அப்புறமா ஊத்திக்கிறதிலயும் கொட்டிக்கிறதிலயும் கண்ணா இருந்தே.
சாப்பிடும் போது எல்லாரும் ரொம்ப டிசிப்பிளீன்." என்றதும்

ஆசா வாய் விட்டுச் சிரித்தாள்.

அவள் நோர்மலுக்கு வந்திருந்தாள்.

"ஆசா
உனக்கு மட்டுமில்ல
எனக்கும் இந்த மாதிரி ஒரு நிலை வந்தா
உன்னை மாதிரிதான் ஆயிடுவேன்.
நாளைக்கு நாங்க முழு நாளும் பெங்களூரில இருப்போம்.
பெங்களூரை சுத்தி காட்டுறதா ரேகா சொன்னா.
நீயும் வா.
பழகி பாரு : பேசி பாரு
டைம் எடு
இப்போ ஒண்ணும் சொல்லாதே
அவன் போகட்டும்
உனக்கு அவன் மேல விருப்பம் ஒண்ணு வருதாண்ணு பாரு
வந்தா ஓகே வராட்டிலும் ஓகே
அவனுக்கு உன்மேல விருப்பம் இருந்தா
இன்னொரு முறை வரட்டும்.
அப்புறம் முடிவெடுக்கலாம்?"

"அதில்ல ஜீவன்
எனக்கு ஒரு போய் பிரண்டு இருந்து................."

அவள் தொடங்கியதும்
"இங்க பாரு ஆசா
எனக்குண்ணு தொடங்கினா.......................வேணாம்
நீ தாங்க மாட்டே?"

ஆசா ஆவென்றாள்.

"முதல்ல வாயை மூடு
விபரத்தை உங்க அக்காகிட்ட கேளு...........
கீழ போகலாமா? என்றேன்.

"ஜீவன்................?" என்றாள்

"இப்போதைக்கு அது போகாது
உடனடியாக இறங்குது" என்றேன்.

என் பின்னே ஆசாவும் இறங்கினாள்
மொட்டை மாடியை விட்டு.....................